பல்லவி
தே3வீ 1நீ பத3 ஸாரஸமுலே
தி3க்கு வேரே க3தி(யெ)வ(ர)ம்மா நா (தே3வீ)
அனுபல்லவி
ஸ்ரீ வெலயு மது4ர நெலகொன்ன
சித்3-ரூபிணீ ஸ்ரீ மீனா(க்ஷ)ம்மா (தே3வீ)
சரணம்
சரணம் 1
அனாத2 ரக்ஷகி அனேடி பி3ருது3
நீ(க)னாதி3 க3தா3 லோக
நாயகீ த4ரலோ க்ரு2பா நிதி4
நீ கன்னா(யெ)வ(ர)ம்மா மா(ய)ம்மா
2கன்னாகு லதா லவித்ரீ நாபை
கடாக்ஷிஞ்சவே வேக3மே
சின்னா வெதலு நீவு தீ3ர்சி நன்னு
3ரக்ஷிஞ்சுட(கி)தி3 மஞ்சி ஸமய(ம)ம்மா (தே3வி)
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
தே3வீ/ நீ/ பத3/ ஸாரஸமுலே/
தேவீ/ உனது/ திருவடி/ தாமரைகளே/
தி3க்கு/ வேரே/ க3தி/-எவரு/-அம்மா/ நா/ (தே3வீ)
புகல்/ வேறே/ கதி/ எவர்/ அம்மா/ எனது/ (தேவீ)
அனுபல்லவி
ஸ்ரீ/ வெலயு/ மது4ர/ நெலகொன்ன/
திரு/ விளங்கும்/ மதுரையில்/ நிலைபெற்ற/
சித்/-ரூபிணீ/ ஸ்ரீ/ மீனாக்ஷி/-அம்மா/ (தே3வீ)
சித்/-உருவினளே/ ஸ்ரீ/ மீனாக்ஷி/ அம்மா/
சரணம்
சரணம் 1
அனாத2/ ரக்ஷகி/ அனேடி/ பி3ருது3/
'அனாதைகளை/ காப்பவள்/' எனப்படும்/ விருது/
நீகு/-அனாதி3/ க3தா3/ லோக/
உனக்கு/ அனாதி/ யன்றோ/ உலக/
நாயகீ/ த4ரலோ/ க்ரு2பா நிதி4/
நாயகியே/ புவியில்/ கருணை/ கடல்/
நீ/ கன்னா/-எவரு/-அம்மா/ மா/-அம்மா/
உன்னை/ விட/ எவர்/ அம்மா/ எமது/ அம்மா/
கன்னாகு லதா லவித்ரீ/ நாபை/
கொழுந்து வெற்றிலை விரும்புபவளே/ என்மீது/
கடாக்ஷிஞ்சவே/ வேக3மே/
கடைக்கணிப்பாயம்மா/ விரைவில்/
சின்னா/ வெதலு/ நீவு/ தீ3ர்சி/ நன்னு/
சின்ன/ கவலைகளை/ நீ/ தீர்த்து/ என்னை/
ரக்ஷிஞ்சுடகு/-இதி3/ மஞ்சி/ ஸமயமு/-அம்மா/ (தே3வி)
காப்பதற்கு/ இது/ நல்ல/ சமயம்/ அம்மா/
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - நீ பத3 ஸாரஸமுலே - நின்னே பத3 ஸாரஸமுலே : இவ்விடத்தில், 'நின்னே' என்பது தவறாகும்.
3 - ரக்ஷிஞ்சுடகிதி3 மஞ்சி ஸமயமம்மா - ரக்ஷிஞ்சுடகிதி3 ஸமயமம்மா.
Top
மேற்கோள்கள்
4 - கத3ம்ப3 கானன - கதம்ப வனம் - மதுரை, 'கதம்ப வனம்' எனப்படும்.
7 - ரமா - ரமை - இலக்குமி. அம்மையின் ஓர் பெயர். லலிதா ஸஹஸ்ர நாமம் (313) நோக்கவும்.
Top
விளக்கம்
2 - கன்னாகு லதா லவித்ரீ - இங்ஙனமே எல்லா புத்தகங்களிலும் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு, 'கொழுந்து வெற்றிலையை விரும்புபவள்' என்று பொருள் கொள்ளப்பட்டுள்ளது. 'கன்னாகு' என்பதற்கு 'வெற்றிலை' என்று பொருளாகும். ஆனால், 'லவித்ரீ' என்பதற்கு 'அரிவாள்' என்று பொருளாகும். ஸ்யாமா ஸாஸ்த்ரியின் புதல்வர், சுப்பராய ஸாஸ்த்ரி, தமது, 'ஜனனி நின்னு வினா' என்ற 'ரீதி கௌள' கிருதியில் 'க4ன பாப லதா லவித்ரீ' என்று அம்மையை அழைக்கின்றார். இதற்கு, 'கொடிய பாவக்கொடியை வெட்டும் அரிவாள்' என்று பொருளாகும். மற்ற சில தோத்திரங்களிலும் 'லவித்ர', 'லவித்ரி' என்ற சொல், 'வெட்டுதல்' என்ற பொருள்படவே பயன்படுத்தப்பட்டுள்ளது.
'கன்னாகு' என்பதற்கு 'சக்கரத்தின் கடைசிக் கதிர்' (final spoke of wheel) என்றும் பொருளாகும்.ஆனால், 'லதா' என்பதற்கு 'கொடி' என்பதைத் தவிர, மற்ற, தகுந்த பொருளேதும் இல்லை. எனவே, பரம்பரையாகக் கொடுக்கப்பட்டுள்ள பொருளாகிய, 'கொழுந்து வெற்றிலையை விரும்புபவள்' என்ற பொருளே இங்கும் ஏற்கப்பட்டது.
Top
5 - ஸாம்ராஜ்யமு - புத்தகங்களில், இதற்கு, 'முத்தி' என்றும் 'பேறு' என்றும் பொருள் கொள்ளப்பட்டுள்ளது. என் சிற்றறிவுக்கு எட்டியவரை, ஒரு உண்மையான தொண்டன், இறைவனிடம், தனக்கு பக்தியொன்றே வேண்டும் என்றுதான் கேட்பான். அங்ஙனமே, இங்கும் 'பக்திப் பேரரசு' என்று பொருள் கொள்ளப்பட்டது.
6 - சிதா3னந்த3 ரூபுடை3யுன்ன - சித்-ஆனந்த வடிவினனாயுள்ள - இவ்விடத்தில், 'உள்ள' என்பது, பரம் பொருளின் இலக்கணமாகிய 'சத்' (sat) என்பதனைக் குறிக்கும் என்று நான் நினைக்கின்றேன். எனவே, இந்த சொற்றொடர், பரம்பொருளின் மூவிலக்கணமாகிய, 'சத்-சித்-ஆனந்தம்' (சச்சிதானந்தம்) என்பதைக் குறிக்கும்.
சித்-உருவினள் - 'பிரக்ஞை' எனப்படும் 'தன்னுணர்வு' உருவினள்
மிருடானீ - அம்மையின் பெயர் - 'மிருடன் (சிவன்) இல்லாள்' என்றும் பொருள் கொள்ளலாம்.
Top